ஆப்நகரம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 2,124 டன் கந்தக அமிலம் வெளியேற்றம்!

சேமிப்பு கொள்கலனில் இருந்து வெளியேறிய கந்தக அமிலம் அகற்றப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Jun 2018, 8:37 pm
தூத்துக்குடி: சேமிப்பு கொள்கலனில் இருந்து வெளியேறிய கந்தக அமிலம் அகற்றப்பட்டுள்ளது.
Samayam Tamil Sterlite Industry
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை


தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை, பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பிறகு மூடி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி, ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கந்தக அமில சேமிப்பு கொள்கலனில் இருந்து கசிவு ஏற்பட்டது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி சார் ஆட்சியர் பிரசாத் தலைமையிலான குழு, ஆலையில் ஆய்வு செய்தது. அதில் கந்தக அமில கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

இந்த சூழலில் கடந்த 18ஆம் தேதியில் இருந்து அமிலம் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையில் ஸ்டெர்லைட் ஆலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

உடனே ஜெனரேட்டர் மூலம் மின் இணைப்பு வழங்கப்பட்டு, பணிகள் தொடங்கின. முதல் கட்டமாக 75 டேங்கர் லாரிகள் மூலம் 1,300 டன் கந்தக அமிலம் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

7வது நாளான இன்று, 94 டேங்கர் லாரிகள் மூலம் 2,124 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டது.

2,124 tons of sulfuric acid removed from Tuticorin Sterlite Factory.

அடுத்த செய்தி