ஆப்நகரம்

செல்பி மோகம்: திருவண்ணாமலையில் வாலிபர் பலி!!

திருவண்ணாமலையில் நீர் வீழ்ச்சியில் செல்பி எடுத்துக் கொண்டு இருந்த 22 வயது வாலிபர் கீழே விழுந்து பலியானார்.

Samayam Tamil 30 Oct 2019, 1:43 pm
திருவண்ணாமலையில் உள்ளது ஜமனமருதூர் கிராமம். இங்குள்ள பீமன் நீர் வீழ்ச்சிக்கு தனது நண்பருடன் எஸ். முரளி சென்றார். இவர் வாணியம்பாடியில் இருக்கும் காலந்திரா என்ற இடத்தைச் சேர்ந்தவர்.
Samayam Tamil Beeman


இவர் தனது நண்பர் ஜி. மணிகண்டனுடன் சென்று இருந்தார். 19 வயதான இவர் வாணியம்பாடியில் உள்ள சின்னமோட்டூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர்.

இவர்கள் நீர் வீழ்ச்சியில் உள்ள பாறையில் நின்று செல்பி எடுத்துக் கொண்டு இருந்தனர். அப்போது, தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து, எலும்பு முறிவு ஏற்பட்டு முரளி இறந்தார். தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் மணிகண்டனை காப்பாற்றினர். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

அடுத்து வருகிறது ‘மகா’ புயல்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இதுகுறித்து காவல்துறை கூறுகையில், ''முரளி, மணிகண்டன் மற்றும் மணிகண்டனின் உறவினர் விஜயகுமார் மூவரும் ஜமுனமருதூரில் இருக்கும் பீமன் நீர் வீழ்ச்சிக்கு சென்றனர். காவல்துறைக்கு அளித்து இருக்கும் வாக்குமூலத்தில் மணிகண்டன் அளித்திருக்கும் விளக்கத்தில், ''காலை 9.45 மணிக்கு முரளியும், மணிகண்டனும் நீர் வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து விஜயகுமாரும் சென்றுள்ளார். பாறை அருகே மணிகண்டனும், முரளியும் குளிக்க முடிவு செய்துள்ளனர்.

இன்னும் இரண்டு நாளைக்கு அடிச்சு வெளுக்கும் மழை!

அப்போது செல்பி எடுக்க முரளி வலியுறுத்தியுள்ளார். இருவரும் செல்பி எடுக்க முயற்சித்தபோது, பாறை வழுக்கலாக இருந்ததால், முரளி வழுக்கி விழுந்துள்ளார். நீருக்குள் விழுந்த முரளியைக் காப்பாற்ற மணிகண்டனும் முயற்சித்து, அவரும் கீழே விழுந்துள்ளார்.

அடேயப்பா.. எட்டு மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. உங்க ஊர் இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க!

தலையில் பலத்த காயமடைந்து, எலும்பு முறிவு ஏற்பட்ட முரளியை மீட்டு ஜமுனமருதூர் ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முரளி இறந்தார். மணிகண்டன் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்'' என்றனர்.

காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அடுத்த செய்தி