ஆப்நகரம்

சாதி மறுப்பு திருமணம் செய்த மகளை கடத்திய பெற்றோர் மீது வழக்குப் பதிவு!

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட 22 வயது பெண்ணை, அவரது குடும்பத்தினர் கடத்திய சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பெண் வீட்டாரின் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.

Samayam Tamil 2 Mar 2019, 6:12 pm
சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட 22 வயது பெண்ணை, அவரது குடும்பத்தினர் கடத்திய சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பெண் வீட்டார் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து அந்தப் பெண்ணை தேடி வருகின்றனர்.
Samayam Tamil 460278-429174-murder


ஈரோட்டில் வசித்து வருபவர் சுகன்யா. 22 வயதாகும் இவர் கோவையை சேர்ந்த செஞ்சேரிபுதூரை சொந்த ஊராகக் கொண்ட சதீஸ் குமாரை காதலித்து வந்துள்ளார். சதீஸ் குமார் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால், சுகன்யா வீட்டில் அவர்கள் காதலுக்கு மறுப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சுகன்யா, வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சத்தீஷ்குமாரின் வீட்டிற்கு சென்ற சுகன்யாவின் தாய், தந்தை மற்றும் அண்ணன் ஆகியோர் அவரை வீட்டுக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் தான் வீட்டுக்கு வரப்போவதில்லை என்று உறுதியாக சுகன்யா தெரிவித்துவிடவே, அவரது குடும்பத்தினர் சதீஷ் குமாரை பலமாக தாக்கிவிட்டு, சுகன்யாவை கடத்தி சென்றனர்.

இதைத்தொடர்ந்து சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறையினர் சதீஷ் குமாரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சுகன்யாவின் பெற்றோர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனிப்படையமைத்து சுகன்யாவை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி