ஆப்நகரம்

தமிழகத்தில் நடப்பாண்டில் 23 யானைகள் பலி: நடவடிக்கை எடுக்குமா வனத்துறை?

தமிழகத்தில் நடப்பாண்டில் மட்டும் 23 யானைகள் பலியாகியுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

TNN 27 Dec 2016, 6:22 pm
கோவை: தமிழகத்தில் நடப்பாண்டில் மட்டும் 23 யானைகள் பலியாகியுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
Samayam Tamil 23 elephants dead in the current year in tamilnadu
தமிழகத்தில் நடப்பாண்டில் 23 யானைகள் பலி: நடவடிக்கை எடுக்குமா வனத்துறை?


வனப்பகுதியை வடிவமைத்ததில் யானைகளுக்கு என்றுமே முக்கிய பங்கு உண்டு. பருவநிலை மாறுபாடு, தனிநபர் ஆக்கிரமிப்புகள் காரணமாக வனப்பகுதிகள் அழிந்து வருகின்றனர். இதனால் வன உயிரினங்களில் நீர்நிலைகளும் அருகி வருகின்றன. இதனால் அங்குள்ள விலங்குகள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழையத் தொடங்குகின்றன. பின்னர் வனத்துறையினர் உதவியுடன், அது இருந்த இடத்திற்கே விரட்டும் முயற்சியில் ஈடுபடுகிறோம்.

இவற்றில் அதிகம் பாதிக்கப்படுவது யானைகள் ஆகும். அடிப்படை தேவைக்காக ஊருக்குள் வரும் யானைகள் பல்வேறு காரணங்களால் இறந்து போகின்றன. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகின்றன. வனப்பகுதியில் உள்ள இலை, தழைகள் காய்ந்து போனதால், விவசாய நிலங்களுக்குள் புகுந்து, பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தி விடுகின்றன.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் யானைகள் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். நடப்பாண்டில் மட்டும் 23 யானைகள் பலியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Elephants are died every year in Tamilnadu. 23 Elephants are dead in current year.

அடுத்த செய்தி