ஆப்நகரம்

சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் 2, 300 ஆண்டுகள் பழமையான கல்சவப்பெட்டி!

தொல்பொருள் ஆய்வில் கண்டெக்கப்பட்டுள்ள கல்சவப்பெட்டி சென்னை கோட்டை அருங்காட்சியத்தில் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Aug 2018, 7:06 pm
தொல்பொருள் ஆய்வில் கண்டெக்கப்பட்டுள்ள கல்சவப்பெட்டி சென்னை கோட்டை அருங்காட்சியத்தில் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil Master


இந்த ஆண்டு தொடக்கத்தில் சென்னையில் உள்ள பல்லாவரத்தில் தொல்பொருள் ஆய்வு நடைபெற்றது. ஜனவரி மாதம் நடைபெற்ற இந்த ஆய்வில் 5.56 அடி கல்சவப்பெட்டி கிடைத்தது. இந்த கல்சவப்பட்டியானது 12 கால்களை கொண்டுள்ளது. இது 5.6 அடி நீளமும் , 1.5 அடி அகலம். 1.6 அடி உயரும் கொண்டது. இதேபோன்ற சவப்பெட்டியை 140 வருடங்களுக்கு முன்பு அலெக்சாண்டர் ரியா என்ற பிரிட்டன் தொல்பொருள் ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார். இந்த கல்சவப்பட்டி 3 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கல்சவப்பட்டியானது சென்னையில் உள்ள சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில்,மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த சவப்பெட்டியானது அங்கேயே தொடர்ந்து காட்சிக்கு வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி