ஆப்நகரம்

நீலகிரி: நிலச்சரிவால் வலுவிழக்கும் கட்டிடங்கள்.. நகராட்சி அதிகாரிகள் கவனமாக செயல்பட கலெக்டர் உத்தரவு..!

மண் சரிவு பாதிப்புகளை முன் கூட்டியே அறிந்து கட்டிட உரிமம் வழங்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் நகராட்சிக்கு வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 13 Nov 2019, 5:14 pm
உதகமண்டலத்தில் 233 பகுதிகளில் நில சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதென மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதனால் புதிய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பாக நகராட்சி அதிகாரிகள் கட்டிடம் அமையவுள்ள இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்யும்படி நீலகிரி மாவட்ட ஆட்சியர் திவ்யா வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil நீலகிரி: நில சரிவால் வலுவிழக்கும் கட்டிடங்கள்


இது குறித்து நகராட்சிக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கட்டிடங்களின் எதிர்கால நலனை கருத்திக்கொண்டு நகராட்சி அதிகாரிகள் செயல்பட வேண்டும். உதகமண்டலத்தில் குறிப்பிட்டு 233 ஆபத்தான இடங்களை தேர்வு செய்துள்ளோம்.

இந்த இடங்களில் கட்டுமானம் நடக்காமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். ஒவ்வொரு கட்டிடத்திற்கு அனுமதி வழங்குவதற்கு முன்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து நில மற்றும் கட்டிட உறுதி தன்மையை தெரிந்து கொள்வதோடு, எந்த அதிகாரியால் உரிமம் வழங்கப்படுகிறதோ அவர் அக்கட்டிடத்தின் உறுதிக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுவனின் மூக்கில் நுழைந்த மீன்; அப்புறம் என்னாச்சு!!

மேலும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் திவ்யா கூறுகையில், சமீபத்தில் நில தரத்தை சரிவர உறுதி செய்யாமலேயே 3 கட்டிடங்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆபத்தான இடங்களில் அமையவுள்ள கட்டிடங்களின் கட்டுமான பணிகள் நடைபெறாது.

இப்படி ஜோரா அதிமுக உடன் ஒட்டிக்கிட்ட தேமுதிக - ஏன் தெரியுமா?

உதகையில் நில சரிவு அபாயம் உள்ள 233 இடங்களின் விவரங்களை சேகரித்துள்ளோம். இனி வரும் காலங்களில் நகராட்சி அதிகாரிகள் மிக துல்லியமாக செயல்பட மேற்பார்வை செய்யப்படுவார்கள் என இவ்வாறு கூறினார்.

அடுத்த செய்தி