ஆப்நகரம்

குழந்தையை தூக்காத கணவன்.. காரணம் கேட்டு அதிர்ந்த மனைவி தற்கொலை..!

மனைவி, குழந்தையை விட்டு வேறு உறவுக்குள் நுழைந்த கணவனால் மனமுடைந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 16 May 2023, 12:47 pm
நல்ல கணவன், நல்ல மனைவி அமைந்தாலும்கூட வேறொரு நபருக்காக நல்ல வாழ்க்கையை கெடுத்துக்கொண்டு நம்பியவர்களுக்கு துரோகம் செய்துவிட்டு செல்லும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்குத்தான் திருமண வாழ்க்கையில் செல்வதற்கு முன்பு துணையை பற்றி முழுவதுமாக தெரிந்துகொள்ள வேண்டும். தூசி தட்டிக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள்.
Samayam Tamil tiruvallur crime


அதேபோல திருமணத்துக்கு பின்னரும் ஒருவரையொருவர் ஒவ்வொரு நகர்வுகளையும் புரிந்து பயணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள். சிலரது வாழ்க்கை திருமணத்துக்கு பிறகு தவறான பாதைக்கு செல்கிறது. அதே சமயம் திருமணத்துக்கு பிறகு ஒருவரது பாதை நிம்மதியாக அமைகிறது. இந்த நிலையில், திருமணத்துக்கு பிறகு வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்து குடும்பத்தையே கணவன் மறந்ததால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஒண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பவானி (24) என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு தற்போது ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் உள்ளது.

பிரசாந்த் ஓரகடத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், சில நாட்களாக பிரசாந்த் குடும்பத்துடன் சரிவர பழகாமல் இருந்து வந்துள்ளார். இதனை கவனித்த பவானி கணவனுக்கு கம்பெனியில் எதாவது பிரச்சினை இருக்கலாம் என்று நினைத்துள்ளார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல பிரசாந்தின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட தொடங்கின. குழந்தையை கூட பிரசாந்த் தூக்காமல் இருந்து வந்துள்ளார்.

இதுகுறித்து கேட்டபோது தான் அந்த அதிர்ச்சியான விஷயம் அம்பலமானது. பிரசாந்த் தான் வேலை பார்க்கும் கம்பெனியில் உள்ள வேறொரு பெண்ணுடன் பழகி வருவதும் வீட்டிற்கு தெரியாமல் அந்த பெண்ணுடனும் குடும்பம் நடத்தி வருவதும் தெரிய வந்தது. இந்த விஷயம் பவானிக்கு தெரிந்த பின்னர் பிரசாந்த் வீட்டிற்கு வருவதையே நிறுத்தியுள்ளார். அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த பவானி நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே பவானியை தூக்கில் இருந்து இறக்கி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பவானி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து பவானியின் தாய் மணவாள நகர் காவல் நிலையத்தில் பிரசாந்த் மீதும் அவரது பெற்றோர் மீதும் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி