ஆப்நகரம்

'இரட்டை இலைக்கு' ஒரு குத்து... 25 கிலோ அரிசி மூட்டை பரிசு.! பட்டப்பகலில் அதிமுகவினர் துணிகரம்...

திருவண்ணாமலை வாக்குச்சாவடியில் அதிமுகவுக்கு வாக்களித்து விட்டு வெளியே வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் முறையில் அரிசி வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 30 Dec 2019, 6:29 pm
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்கு பதிவு இன்று நடந்து வருகிறது. இந்நிலையில் போலீசாரின் கண்காணிப்பையும் தாண்டி அதிமுக வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு அரிசி மூட்டையை பரிசாக தந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil இரட்டை இலைக்கு ஒரு குத்து 25 கிலோ அரிசி மூட்டை பரிசு


திருவண்ணாமலை மாவட்டம் சேவூரில் அதிமுக சார்பில் ஊராட்சி தலைவராக தீபா, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு கௌரி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தர்மன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் மூவரும் இணைந்து அதிமுகவுக்கு வாக்களித்தவர்களை சந்தோஷப்படுத்த ஆளுக்கு 25 கிலோ அரசி மூட்டை வழங்க திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி இன்று முன்னதாக டோக்கன் பெற்றுக்கொண்டு வாக்களித்துவிட்டு விட்டு வெளியில் வந்த வாக்காளர்களுக்கு அப்பகுதியில் உள்ள அரிசி மண்டியில் தலா 25 கிலோ அரிசி மூட்டை வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் மக்கள் முண்டியடித்துக்கொண்டு அரிசி மண்டிக்கு சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோலம் போச்சு... மெஹந்தி வந்துச்சிடுச்சு... டும் டும் டும்!!

சம்பவம் அறிந்த போலீசார் அரிசி விநியோகம் செய்த கடை உரிமையாளரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் சேவூரில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் தீபா, அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் நெருங்கிய உறவினர் எனவும் கூறப்படுகிறது.

இதேபோல விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கத்தாளம்பட்டி ஊராட்சி மன்ற பதவிக்கு லட்சுமி என்பவர் போட்டியிடுகிறார். அதே பகுதியில் லட்சுமியின் கணவர் முருகேசன் பாஜக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

இந்த தம்பதிக்கு வாக்களிக்க கூறி அப்பகுதி வாக்காளர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு 25 கிலோ அரிசி வழங்கியதாக கூறப்படுகிறது. மறைவான இடத்தில் அரிசி மூட்டைகளை வழங்கிய நபரை பிடித்துள்ள போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தேர்தல் விதிமுறைகளை மீறி இருவேறு இடங்களில் நடந்த இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அடுத்த செய்தி