கொழும்பு: தமிழகத்திலிருந்து 25 அகதிகள் இலங்கை தமிழ் அகதிகள் நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அகதி முகாம்களிலிருந்து 25 இலங்கை தமிழ் அகதிகள் நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 15 பெண்களும் 10 ஆண்களுமாக மொத்தம் 8 குடும்பங்களை சேர்ந்த 25 பேர் உள்ளனர். மதுரையிலிருந்து மிஹின் லங்கா விமானம் வழியாக கொழும்பு நகரை அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை மீள்குடியேற்ற அமைச்சக குறிப்புகள் படி, தற்போது நாடு திரும்ப உள்ளவர்கள் வவுனியா, மன்னார், திருகோணமலை, மாத்தளை, கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNHCR) இவர்களுக்கான பயணச் செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளது. அத்துடன் மீள் ஒருங்கிணைப்பு தொகையாக ஒரு நபருக்கு 5000 இந்திய ரூபாயும், பயணப்படியாக ஒரு நபருக்கு 1200 ரூபாயும், உதவித்தொகையாக ஒரு குடும்பத்திற்கு 5000 ரூபாயும் ஐக்கிய நாடுகள் ஆணையம் சார்பாக வழங்கப்படுகிறது.
கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 1874 குடும்பங்களைச் சேர்ந்த 5,140 தமிழ் அகதிகள் தமிழக முகாம்களிலிருந்து இலங்கைக்கு திரும்பி இருக்கின்றனர். மேலும் தமிழகத்திலுள்ள 110 அகதி முகாம்களில் 60,000-த்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் அகதிகளாக வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
25 refugess gone back to Srilanka
தமிழக அகதி முகாம்களிலிருந்து 25 இலங்கை தமிழ் அகதிகள் நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 15 பெண்களும் 10 ஆண்களுமாக மொத்தம் 8 குடும்பங்களை சேர்ந்த 25 பேர் உள்ளனர். மதுரையிலிருந்து மிஹின் லங்கா விமானம் வழியாக கொழும்பு நகரை அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை மீள்குடியேற்ற அமைச்சக குறிப்புகள் படி, தற்போது நாடு திரும்ப உள்ளவர்கள் வவுனியா, மன்னார், திருகோணமலை, மாத்தளை, கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNHCR) இவர்களுக்கான பயணச் செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளது. அத்துடன் மீள் ஒருங்கிணைப்பு தொகையாக ஒரு நபருக்கு 5000 இந்திய ரூபாயும், பயணப்படியாக ஒரு நபருக்கு 1200 ரூபாயும், உதவித்தொகையாக ஒரு குடும்பத்திற்கு 5000 ரூபாயும் ஐக்கிய நாடுகள் ஆணையம் சார்பாக வழங்கப்படுகிறது.
கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 1874 குடும்பங்களைச் சேர்ந்த 5,140 தமிழ் அகதிகள் தமிழக முகாம்களிலிருந்து இலங்கைக்கு திரும்பி இருக்கின்றனர். மேலும் தமிழகத்திலுள்ள 110 அகதி முகாம்களில் 60,000-த்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் அகதிகளாக வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
25 refugess gone back to Srilanka