ஆப்நகரம்

வேலூர் அருகே தொழிலதிபர் வீட்டில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை!

வேலூர் மாவட்டம் அருகே, தொழிலபதிபர் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 25 சவரன் தங்கநகைகள் மற்றும் ரூ.4.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Feb 2019, 11:50 am
வேலூர் மாவட்டம் அருகே, தொழிலபதிபர் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 25 சவரன் தங்கநகைகள் மற்றும் ரூ.4.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil வேலூர் அருகே தொழிலதிபர் வீட்டில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை!
வேலூர் அருகே தொழிலதிபர் வீட்டில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை!


வேலூர் மாவட்டம், தென்னமரத்தெருவை சேர்ந்தவர் பன்னீர். இவர் ஊதுபத்தி மொத்த விற்பனை மற்றும் பைனான்சியர் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் பன்னீர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் உறவினர் திருமணத்திற்கு சென்றுள்ளார்.

இதனை அறிந்த மர்ம நபர்கள் நள்ளிரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த இருந்த 25 சவரன் தங்கநகைகள் மற்றும் ரூ.4. 50 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றனர். மீண்டும் பன்னீர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, நகைகள் பணம் கொளையடிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, வேலூர் தெற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கொள்ளை போன நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றின் மதிப்பு ரூ.11 லட்சமாகும்.

ஆட்கள் நடமாட்டமுள்ள பகுதியில் தொழிலதிபரின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

அடுத்த செய்தி