ஆப்நகரம்

நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 250 தமிழர்கள் சிக்கித் தவிப்பு

தமிழகத்தில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற 250 க்கும் மேற்பட்டவர்கள் திரும்பி வர இயலாமல் அங்கு சிக்கி தவித்து வருகின்றனர்.

TNN 19 Oct 2016, 11:23 am
தமிழகத்தில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற 250 க்கும் மேற்பட்டவர்கள் திரும்பி வர இயலாமல் அங்கு சிக்கி தவித்து வருகின்றனர்.
Samayam Tamil 250 tamilans stranded in nepal seeks governments help
நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 250 தமிழர்கள் சிக்கித் தவிப்பு

சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமானுஜர் அறக்கட்டளை சார்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 250க்கும் மேற்பட்டவர்களை கடந்த வாரம் ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

சுற்றுலா சென்றவர்கள் கொண்டு சென்ற அனைத்து பணத்தையும் அறக்கட்டளை நிர்வாகிகள் வாங்கி வைத்துக் கொண்டதாகவும், நேபாளம் நாட்டின் பொக்காரா என்ற இடத்தில் இறக்கி விடப்பட்ட நிலையில் அவர்கள் பாதி வழியிலேயே சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அவர்களிடம் மீண்டும் தமிழகத்திற்கு திரும்பி வர பணம் இல்லை என்றும், சுற்றுலா சென்றவர்களில் 60 வயதை கடந்த 100க்கும் மேற்பட்டவர்கள் இருப்பதால், அவர்கள் கொண்டு சென்ற மருந்துகள் தீர்ந்த நிலையில் அங்கு சிக்கி தவித்து வருகின்றனர். எப்படியாவது மீண்டும் தமிழகம் திரும்ப மத்திய அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி