ஆப்நகரம்

தாம்பரம் , மடிப்பாக்கத்தில் 27 தெரு நாய்கள் திடீர் உயிரிழப்பு!

சென்னையில் உள்ள மடிப்பாக்கம் மற்றும் தாம்பரத்தில் கடந்த வாரத்தில் மட்டும் 27 நாய்கள் உயிரிழந்துள்ளது. இந்த நாய்களுக்கு யாரோ விஷம் வைத்துக்கொன்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Samayam Tamil 16 Feb 2019, 1:53 pm
சென்னையில் உள்ள மடிப்பாக்கம் மற்றும் தாம்பரத்தில் கடந்த வாரத்தில் மட்டும் 27 நாய்கள் உயிரிழந்துள்ளது. இந்த நாய்களுக்கு யாரோ விஷம் வைத்துக்கொன்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
Samayam Tamil sakbjabk


சென்னையில் உள்ள மடிபக்கம், தாம்பரம் பகுதிகளில் 27 தெரு நாய்கள் கடந்த வாரத்தில் மட்டும் உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஜெருஸ்லாம் நகர், டிடிகே நகர், மல்லிகா நகரில் வசித்து வரும் மக்கள் பழவந்தாங்கல் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக புளூ கிராஸ்யில் புகார் கொடுக்குமாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதைத்தொடர்ந்து உயரதிகாரிகளிடம் பேசிய காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த நாய்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பார்த்து தெருநாய்கள் குறைப்பதால் , அவர்களில் யாராவது விஷம் வைத்து நாய்களை கொன்றிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.

அடுத்த செய்தி