ஆப்நகரம்

ஜெயலலிதா இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் 29 பேர் உயிரிழப்பு!

ஜெயலலிதா இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் 29 பேர் உயிரிழப்பு!

TOI Contributor 7 Dec 2016, 12:51 am
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த செய்தியை கேட்டு தமிழகத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil 29 people died after listening jayalalitha death news
ஜெயலலிதா இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் 29 பேர் உயிரிழப்பு!


உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு உயிரிழந்ததாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இந்த செய்தியை கேட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 29 பேர் உயிரிழந்துள்ளனர். பழவேற்காடு பகுதியை சேர்ந்த சின்னகுழந்தை, பொன்னேரியை சேர்ந்த நைனியப்பன், மீஞ்சூரை சேர்ந்த மீனா ஆகியோர் செய்தி கேட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் உயிரிழந்தனர். தேனி மாவட்டம், பள்ளி வாசல் பகுதியை சேர்ந்த அதிமுக இளைஞர் பாசறை நிர்வாகி சந்திரன் ஜெயலலிதாவின் உடல் கவலைக்கிடமான நிலையில் இருப்பதை அறிந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதே போல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டும், துக்கம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த செய்தி