ஆப்நகரம்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்:தீர்ப்பு தேதி நாளை அறிவிப்பு.!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் நாளை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு தேதியை அறிவிக்க உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

TNN 24 Oct 2017, 2:56 pm
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் நாளை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு தேதியை அறிவிக்க உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil 2g spectrum corruption case sentenced date announce on tomorrow
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்:தீர்ப்பு தேதி நாளை அறிவிப்பு.!


நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கை, டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி விசாரித்து வந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில்தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான, திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின், அரசியல் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததால் பலரும் இந்த தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் அக்டோபர் 25ம் தேதியன்று, தீர்ப்பு தேதி குறித்து அறிவிக்கப்படும் என நீதிபதி ஷைனி ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதனால் நாளை இந்த அறிவிப்பு வெளியாகும் என்பதால் தமிழக அரசியலிலும், திமுக வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2G spectrum corruption case sentenced date announce on tomorrow.

அடுத்த செய்தி