ஆப்நகரம்

2ஜி அலைகற்றை முறைகேடு: நாளை வெளியாகிறது இறுதிதீர்ப்பு!

நாட்டையே உலுக்கிய 2ஜி அலைகற்றை முறைகேடு வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

TNN 20 Dec 2017, 7:18 pm
நாட்டையே உலுக்கிய 2ஜி அலைகற்றை முறைகேடு வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil 2g spectrum judgement will be announced tomorrow
2ஜி அலைகற்றை முறைகேடு: நாளை வெளியாகிறது இறுதிதீர்ப்பு!


திமுக கட்சியைச் சேர்ந்த ஆர்.ராஜா, கனிமொழி மற்றும் ஷாகித் பால்வார் உள்ளிட்ட 11 பேர் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு 2ஜி அலைகற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைத் தொடங்கியது.

சுமார் 6 ஆண்டுகளாக நடந்த இந்த விசாரணையில், கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியன்று அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தநிலையில், தீர்ப்பு வெளியாவது தொடர்ந்து தள்ளிப்போனது.

இந்நிலையில், 2ஜி வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்போது, மனுதாரர் சுப்ரமணிய சுவாமி, குற்றம் சாட்டப்பட்ட ஆர்.ராஜா, கனிமொழி ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

அடுத்த செய்தி