ஆப்நகரம்

பேருந்துகள் ஓடாததால், சென்னை புறநகர் ரயிலில் கூடுதலாக பயணித்த 3.48 லட்சம் பேர்!

வார இறுதியில் புறநகர் ரயிலில் லட்சக்கணக்கான மக்கள் பயணித்துள்ளனர்.

TNN 8 Jan 2018, 11:05 pm
சென்னை: வார இறுதியில் புறநகர் ரயிலில் லட்சக்கணக்கான மக்கள் பயணித்துள்ளனர்.
Samayam Tamil 3 48 lakh more passengers travel in chennai suburban trains on weekend
பேருந்துகள் ஓடாததால், சென்னை புறநகர் ரயிலில் கூடுதலாக பயணித்த 3.48 லட்சம் பேர்!


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் ரயில்சேவையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் சென்னை ரயில்வே கோட்ட அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், முன்பதிவு செய்யாத டிக்கெட்கள் மூலம் ஜனவரி 6(சனிக்கிழமை) 2.02 லட்சம் பயணிகளும், ஜனவரி 7(ஞாயிறுக்கிழமை) 1.38 லட்சம் பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.

வேலைநிறுத்தத்தின் முதல் நாளான ஜனவரி 5ஆம் தேதி, வழக்கத்தை விட 1.4 லட்சம் பேர் கூடுதலாக பயணித்துள்ளனர்.

அதேபோல் UTS மொபைல் ஆப் மூலம் டிக்கெட்கள் வாங்குவோர் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.

அதாவது ஜனவரி 5ஆம் தேதி, 24,000 பேரும், ஜனவரி 6ஆம் தேதி 28,000 பேரும், ஜனவரி 7ஆம் தேதி 32,000 பேரும் பதிவு செய்து டிக்கெட் பெற்றுள்ளனர்.

3.48 lakh more passengers travel in Chennai suburban trains on weekend.

அடுத்த செய்தி