ஆப்நகரம்

முதல்வர் ஜெ.,-க்கு சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் வருகை

உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் சென்னை வந்துள்ளனர்.

TNN 6 Oct 2016, 9:34 am
சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் சென்னை வந்துள்ளனர்.
Samayam Tamil 3 aiims specialists in chennai to treat cm jayalalithaa
முதல்வர் ஜெ.,-க்கு சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் வருகை


கடந்த மாதம் 22-ம் தேதியன்று இரவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவு காரணமாக #JayaHealth முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் கண்காணிப்பில் முதல்வர் உள்ளார் என்றும் #ApolloHospitals அப்பல்லோ மருத்துவமனை அவ்வப்போது செய்திக் குறிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதேசமயம், முதல்வரின் #Jayalalitha உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகளும் பரவி வருகிறது.

இதனிடையே, லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே கடந்த 30-ம் தேதியன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து சென்றார். தொடர்ந்து, அவரது ஆலோசனையின் பேரில் சிகிச்சை நடைபெற்று வருவதாகவும், அவர் மீண்டும் சென்னைக்கு வரவுள்ளார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், செயற்கை சுவாசத்துடன் முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பின்னர், முதல்வருக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததோ, அதே மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினம் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் சென்னை வந்துள்ளனர். இதுகுறித்த எந்த செய்திக் குறிப்பையும் மருத்துவமனை வெளியிடவில்லை. ஆனால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் இதனை உறுதிபடுத்தியுள்ளனர்.

நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர்.ஜி.சி.கில்னானி, இதய சிகிச்சை நிபுணர் டாக்டர்.நிதிஷ் நாயக், மயக்க மருத்துவ நிபுணர் டாக்டர்.அஞ்சன் த்ரிக்கா ஆகிய மருத்துவர்கள் சென்னைக்கு சென்றுள்ளதாக தெரிவித்த அமைச்சக அதிகாரிகள், இதற்கு மேல் எந்த தகவலையும் எங்களால் தெரிவிக்க முடியாது என்று மறுத்து விட்டனர்.

3 AIIMS specialists in Chennai to treat CM Jayalalithaa #JayaHealth #ApolloHospitals #TamilnaduCM

அடுத்த செய்தி