ஆப்நகரம்

கடல் அலையில் சிக்கி 3 சிறுவர்கள் பலி; தனுஷ்கோடி சுற்றுலாவில் விபரீதம்!

கடலில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் பலியாகினர்.

Samayam Tamil 6 May 2018, 1:48 am
ராமேஸ்வரம்: கடலில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் பலியாகினர்.
Samayam Tamil Sea Dead
தனுஷ்கோடி,


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா செலுவை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் உட்பட 13 பேர் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா சென்றனர். அங்கு கோவிலில் வழிபட்டு, தனுஷ்கோடி சென்றனர்.

இந்நிலையில் அரிச்சல்முனை கடல் பகுதியில் சிறுவர், சிறுமியர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடல் அலையில் 3 குழந்தைகள் சிக்கிக் கொண்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனே மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மூவரையும் காப்பாற்ற முடியவில்லை.

செலுவை ஆனந்தன் மகன் இன்பத்தமிழன்(12), கோனேஇ ஜெகநாதன் மகள் இனிதா(10), பூமிநாதன் மகள் சுவேதா(11) ஆகிய 3 குழந்தைகளும் உயிரிழந்தனர்.

இவர்களில் இன்பத்தமிழன் உடல் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3 children died in Dhanushkodi sea.

அடுத்த செய்தி