ஆப்நகரம்

மாமல்லபுரம் கடலில் குளித்த கடல் மாணவர்கள் 3 பேர் மாயம்!

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கடலில் குளித்த 3 கல்லூரி மாணவர்கள் மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TNN 23 Mar 2017, 9:56 pm
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கடலில் குளித்த 3 கல்லூரி மாணவர்கள் மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 3 college students washed away in mahabalipuram sea
மாமல்லபுரம் கடலில் குளித்த கடல் மாணவர்கள் 3 பேர் மாயம்!


காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பக்தவச்சலம் பாலிடெக்னிக் கல்லூரியில் எலட்ரானிக் என்ஜீனியரிங் பிரிவில், மூன்றாம் ஆண்டு படித்துவரும் மாணவர்கள் 6 பேர் இன்று மாமல்லபுரம் பகுதிக்குச் சுற்றுலா வந்தனர். அங்குள்ள கடற்கரை கோவிலைச் சுற்றி பார்த்த மாணவர்கள், பின்னர் அருகில் உள்ள கடலில் குளியல் போட முடிவு செய்தனர்.

இதன்போது, கடலில் எழுந்துவந்த ராட்சத அலையில் சிக்கி, வெங்கடேசன், ராம்கி, விஜயகுமார் ஆகிய மூன்று பேர் மாயமானதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி சக மாணவர்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் விரைந்து வந்து, மாயமான மாணவர்களை தேடினர். அப்பகுதி மீனவர்கள் உதவியுடன் தொடர்ந்து, கடல் மூழ்கிய மாணவர்களை தேடிவருவதாகவும், அவர்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

3 College Students washed away in Mahabalipuram sea, police searching for dead bodies.

அடுத்த செய்தி