ஆப்நகரம்

3 தொகுதி தேர்தலில் த.மா.கா புறக்கணிப்பு: ஜி.கே.வாசன் அறிவிப்பு

தமிழகத்தில் நடைபெறவுள்ள 3 தொகுதிக்கான இடைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

TNN 26 Oct 2016, 12:08 pm
சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள 3 தொகுதிக்கான இடைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 3 constituency electiontmc is not contesting says g k vasan
3 தொகுதி தேர்தலில் த.மா.கா புறக்கணிப்பு: ஜி.கே.வாசன் அறிவிப்பு


சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் கூறுகையில், தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் இடைத் தேர்தலில் த.மா.கா பங்கேற்காது' என அறிவித்தார்.

மேலும் இடைத் தேர்தல் நியாயமாக நடைபெறுவதில் சந்தேகம் இருப்பதால், த.மா.கா தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார். இசைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் போட்டியிடாமல் இருப்பது இது ஒன்றும் புதிதில்லை என்றும் வாசன் தெரிவித்தார்.

அடுத்த செய்தி