ஆப்நகரம்

சிலிண்டரை வெடிக்கச்செய்து மனைவி, மகள் கொலை... வியாபாரி தற்கொலை..!!

கடன் தொல்லையால் மனஉளைச்சலுக்குக்கு ஆளான வியாபாரி ஒருவர் மனைவி, மகளுக்கு தெரியாமல் சிலிண்டரை வெடிக்கச்செய்து குடும்பத்துடன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 5 Jul 2018, 10:31 am
கடன் தொல்லையால் மனஉளைச்சலுக்குக்கு ஆளான வியாபாரி ஒருவர் மனைவி, மகளுக்கு தெரியாமல் சிலிண்டரை வெடிக்கச்செய்து குடும்பத்துடன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil cover-pic
சிலிண்டர் வெடிக்கச்செய்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள பாலாஜி நகரை சேர்ந்த ராமமூர்த்தி. மிட்டாய், வெதுப்புகள் உள்ளிட்டவற்றை வியாபாரம் செய்து இவருக்கு சமீப காலமாக தொழில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அதனால் கடனை வாங்கி, அதை திரும்ப செலுத்த முடியாமல் சிரமப்பப்பட்டுள்ளார். மேலும் குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் மனைவி மற்றும் கணவனுக்கு இடையில் தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது.

திருமூர்த்தி, காஞ்சனா, குழந்தை அட்சயா


இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ராமமூர்த்தி, நேற்றிரவு 2 மணியளவில் மனைவி காஞ்சனா, ஆறு வயது மகள் அட்சயா தூங்கி கொண்டிருந்த போது தற்கொலை முயற்சியில் இறங்கினார்.

சமையலறையிலிருந்த சிலிண்டரை எடுத்து வந்து, படுக்கை அறையில் வைத்து அதை திறந்துவிட்டுள்ளார். மேலும் தீயை பற்ற வைக்க சிலிண்டார் டமால் என்று வெடித்துள்ளது. வீட்டிலிருந்த மற்றொரு இதனால் சிலிண்டரும் வெடித்துள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே காஞ்சனா மற்றும் குழந்தை அட்சயா உடல் சிதறி உயிரிழந்தனர். ராமமூர்த்தி படுகாயமடைந்த நிலையில் உயிருக்காக போராடிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், ராமமூர்த்தியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

சம்பவம் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் காவல் துறையினர், விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். கடன்தொல்லையால் ராமமூர்த்தி எடுத்த இந்த முடிவு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி