ஆப்நகரம்

எல்இடி பயங்கரவாதிகளுடன் தொடர்பு: கோவையில் மூவரிடம் விசாரணை!!

கோவையில் எல்இடி பயங்கரவாதிகளுடன் தொடர்பு உடையதாக சந்தேகிக்கப்படும் மூவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 24 Aug 2019, 5:24 pm
தமிழகத்திற்குள் ஆறு லஷ்கர் இ தொய்பா (எல்இடி) தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் குறித்த தகவல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு, தமிழக அரசை எச்சரித்து இருந்தது. இவர்கள் ஆறு பேரும் கோவையில் முகாமிட்டு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, கோவை நகரம் முழுவதும் போலீஸ் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
Samayam Tamil Let 15


இவர்களில் ஒருவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் மற்ற ஐந்து பேர் இலங்கையச் சேர்ந்த தமிழ் முஸ்லிம்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தனர். இவர்களை கோவையில் கடந்த 21 ஆம் தேதி இறுதியாக காணப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் இன்று கோவையில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு உடையவர்களாக நம்பப்படும் மூவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கிடைத்த தகவலின்படி, சென்னையைச் சேர்ந்த சித்திக், கோவை உக்கடத்திலுள்ள பொன்விழா நகரைச் சேர்ந்த ஜாஹீர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அவர்கள் கோவை காருண்யா நகர் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். சித்திக், ஜாஹீர் இவர்கள் இருவரும் திருச்சூரைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவரிடம் அடிக்கடி தொலைபேசியில் பேசியுள்ளனர். அப்துல்காதர் லக்ஷர்-இ-தொய்பா பயங்கவராத அமைப்புடன் தொடர்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் பயங்கரவாதிகள் தாக்க திட்டமிட்டு இருந்த அந்த இடங்கள் இவைதான்!!

தமிழகத்தில் அன்னை வேளாங்கண்ணி கோயில், சூலூர் விமானப் படைத்தளம், பதனம்திட்டா சபரிமலை ஆகிய இடங்களை தாக்குவதற்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாகவும், எனவே அந்தப் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், கமாண்டோ போலீசார் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

எல்இடி பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு; உச்சகட்ட பாதுகாப்பில் கோவை!!

கோவையின் பல்வேறு இடங்களில் கமாண்டோ போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக எல்லைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி