ஆப்நகரம்

விழுப்புரம் அருகே பட்டாசு வேன் வெடித்த கோர விபத்தில் 3 பேர் பலி.! 12 பேர் படுகாயம்..

சின்ன யானை வண்டியில் பட்டாசு பொருட்களை ஏற்றிச் சென்றதால் ஏற்பட்ட கோர விபத்தில் ஓட்டுநர் உட்பட மூன்று பேர் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 30 Sep 2019, 7:15 pm
புதுச்சேரியை சேர்ந்த லோடு வேன் ஒன்று பட்டாசுகளை ஏற்றிக் கொண்டு திண்டிவனம்-செஞ்சி நெடுஞ்சாலையில் இன்று மாலை சென்றுகொண்டிருந்தது. அப்போது வண்டியின் பின்னால் புகை வருவதைக் கண்ட வாகன ஓட்டிகள் இதுகுறித்து வேன் ஓட்டுனரிடம் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil 7


இதனையடுத்து வண்டியைச் சாலையின் ஓரமாக நிறுத்திய ஓட்டுநர் இளவரசன் தண்ணீரை கொண்டு புகையை அணைக்க முயன்றுள்ளார். இவருடன் சேர்ந்து வண்டி கிளீனர் மற்றும் மற்றொரு நபரும் தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சாலையிலிருந்த வாகன ஓட்டிகள் சிலர், வண்டியில் என்ன இருக்கிறது என்பதைக் குறித்து ஓட்டுநர் இளவரசனிடம் விசாரித்துள்ளனர். பட்டாசு பொருட்கள் இருப்பதை அறிந்த அவர்கள் சுதாரித்துக்கொண்டு வண்டிக்கு மிக தூரமாகச் சென்று விட்டதாகக் கூறுகின்றனர்.

இந்நிலையில் வண்டியில் ஏற்பட்ட புகை தீவிரமடைந்து கண்ணிமைக்கும் நேரத்தில் வண்டி முழுவதுமாக வெடித்துச் சிதறியுள்ளது. இந்த கோர விபத்தில் தீயை அணைக்க முயன்ற ஓட்டுநர் இளவரசன் உட்பட மூன்று பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். வண்டிக்குச் சற்று தூரத்தில் இருந்த 12 பேர் சிறு பெரு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். வேன் மூலம் பட்டாசை திருவண்ணாமலைக்கு சப்ளை செய்த வீராசாமி ஃபயர் வொர்க்கர்ஸ் உதவியாளரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி