ஆப்நகரம்

சென்னையில் சொகுசு காா் மோதி 3 போ் படுகாயம்

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் சொகுசு காா் ஒன்று வேகமாக மோதியதில் சாலை ஓரம் நின்றிருந்த 3 போ் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

Samayam Tamil 14 Sep 2018, 1:51 am
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் சொகுசு காா் ஒன்று வேகமாக மோதியதில் சாலை ஓரம் நின்றிருந்த 3 போ் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
Samayam Tamil 4585f2b2-e0ef-48b4-b010-4e3c2ff950e6


சென்னை வடபழனி அருகே குழந்தையின்மைக்கு பிரத்யேகமாக மருத்துவமனை நடத்தி வருபவரின் மகன் ஆகாஷ். இவா் வியாழன் கிழமை வள்ளுவா் கோட்டம் அருகே தனது சொகுசு காரில் அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த காா் அருகில் இருந்த நடைமேடை மீது ஏறி இருசக்கர வாகனங்கள் மீது பங்கரமாக மோதி நின்றது.

இந்த விபத்தில் நடைமேடையில் நின்று கொண்டு இருந்த 3 போ் படுகாயமடைந்தனா். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினா் சம்பவ இடத்திற்கு நேரில் வந்த காவல் துறையினா் காயமடைந்தவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வித்திற்கு காரணமாக ஆகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அடுத்த செய்தி