ஆப்நகரம்

சிறுநீரகத்தை விற்க 3 தமிழகர்கள் கேரள மருத்துவமையில் அனுமதி.!

தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் தங்கள் சிறுநீரகத்தை விற்க கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 29 Oct 2017, 11:26 am
தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் தங்கள் சிறுநீரகத்தை விற்க கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 3 tamil people sold their kidney in kerala hospital
சிறுநீரகத்தை விற்க 3 தமிழகர்கள் கேரள மருத்துவமையில் அனுமதி.!


கந்து வட்டிக் கொடுமையால் நெல்லையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்பவரை அவர் பெற்ற ரூ.5 லட்சம் கடனுக்காக கேரள மருத்துவமனையில் சிறுநீரகத்தை விற்கும் தருவாயில் காப்பாற்றப்பட்டார்.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த மேலும் 3 பேர் சிறுநீரகத்தை விற்க எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஈரோடு பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு சிறுநீரகம் எடுக்கப்பட்டுவிட்டது. பவானி காளிங்கராயன்பாளையத்தைச் சேர்ந்த 28 வயது பெண்ணும் தனது சிறுநீரகத்தை விற்பனை செய்தார். அதேபோல் வெப்படையைச் சேர்ந்த ஒருவருக்கு சிறுநீரகத்தை அகற்ற பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இவர்கள் 3 பேரும் கந்து வட்டிக் கொடுமையால் சிறுநீரகத்தை விற்க அனுமதிக்கப்பட்டுள்ளனரா என்ற கோணத்தில் தகவலறிந்த காவல்துறையினர், இவர்கள் 3 பேரும் கந்து வட்டிக் கொடுமையால் சிறுநீரகத்தை விற்க அனுமதிக்கப்பட்டுள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

3 Tamil people sold their kidney in kerala hospital

அடுத்த செய்தி