ஆப்நகரம்

கடலூர் மாவட்டத்தில் கழிவு நீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி!!

கடலூர் மாவட்டத்தில் கழிவு நீர் தொட்டிக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

Samayam Tamil 30 Oct 2019, 3:24 pm
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பண்டரகோட்டையைச் சேர்ந்தவர் மகாராஜன். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு 3 வயதில் பவழவேணி என்ற பெண் குழந்தை உள்ளது. பிரியாவின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால், அருகில் இருக்கும் தங்களது உறவினர்களின் வீட்டில் குழந்தை பவழவேணியை விட்டு விட்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.
Samayam Tamil Drainage


இந்தக் குழந்தை வீட்டுக்கு அருகே கழிவு நீருக்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்துள்ளது. இதை யாரும் கவனிக்கவில்லை, குழந்தையும் குழியில் விழுந்து கிடந்துள்ளது.

சுஜித் மரண மர்மம்... ஸ்டாலின் கேட்கும் கேள்விகள்

மருத்துவமனைக்கு சென்ற பெற்றோரும் வீட்டுக்கு திரும்பினர். குழந்தை கழிவுநீருக்காக தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்து கிடந்தது தெரிய வந்தது. குழந்தையை தூக்கிப் பார்த்தபோது, உயிரற்ற நிலையில் இருந்துள்ளது. மழை பெய்து குழிக்குள் அதிக நீர் இருந்த காரணத்தால் குழந்தை பவழவேணி இறந்து இருப்பது தெரிய வந்தது.

செல்பி மோகம்: திருவண்ணாமலையில் வாலிபர் பலி!!

பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி மருத்துவமனைக்கு குழந்தை எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்து வருகிறது ‘மகா’ புயல்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த செய்தி