ஆப்நகரம்

கடனுக்காக குழந்தை கடத்தல்:மீட்டுத்தரக் கோரி தாய் கதறல்..!

கடன் வாங்கிய பணத்தை திரும்ப தராததால் சென்னையைச் சேர்ந்த தம்பதிகளின் 3 வயது குழந்தை கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 31 Jul 2016, 2:27 am
கடன் வாங்கிய பணத்தை திரும்ப தராததால் சென்னையைச் சேர்ந்த தம்பதிகளின் 3 வயது குழந்தை கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 3 years old child kidnapped for debt in chennai
கடனுக்காக குழந்தை கடத்தல்:மீட்டுத்தரக் கோரி தாய் கதறல்..!


சென்னையை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த முகமது யூனுஸ்,ஷாமா யாஸ்மீன் தம்பதிகள் ஆன்லைன் மூலம் தொழில் செய்து வந்தனர்.தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடன் ஏற்பட்டுள்ளது.கடனை அடைப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரிடம் கந்து வட்டிக்கு 6.5 லட்சம் கடனாக பெற்றுள்ளனர்.இந்நிலையில் மலேசியாவுக்கு வேலைக்காக முகமது யூனுஸ் சென்றுவிட, ஷாமா யாஸ்மீனிடன் சங்கர் கடன் தொகையை திரும்ப கேட்டு வந்தார்.இந்நிலையில் யாஸ்மீன் மற்றும் அவரது 3 வயது மகன் முகமது யாசிப் ஆகியோரை சங்கர் மற்றும் சிலர் சேர்ந்து கடத்திச் சென்று 20 நாட்களுக்கும் மேலாக கடன் தொகையை கேட்டு அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

ஆத்தூரில் உள்ள நிலத்தை விற்று கடன் தொகையை திருப்பி அளித்துவிடுவதாக யாஸ்மீன் தெரிவிக்கவே,அவரை மட்டும் விடுவித்த சங்கர்,முகமது யாசினை வீட்டுச்சிறையில் வைத்துள்ளான்.இதனை தொடர்ந்து சேலம் போலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த யாஸ்மீன் தன் குழந்தையை காப்பாற்றுமாறு கதறி அழுதார்.இதனை தொடர்ந்து சென்னை பட்டினப்பாக்கம் காவல்துறையினரிடம் இந்த வழக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.குழந்தையை மீட்க காவல்துறையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி