ஆப்நகரம்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 4ம் கட்டமாக 30 கைதிகள் விடுதலை!

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி 4ம் கட்டமாக மதுரை திருச்சி மத்திய சிறைச்சாலைகளில் இருந்து 30 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

Samayam Tamil 25 Aug 2018, 10:13 am
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி 4ம் கட்டமாக மதுரை திருச்சி மத்திய சிறைச்சாலைகளில் இருந்து 30 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
Samayam Tamil madurai jail


தமிழகத்தில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் 10 ஆண்டுக்கும் மேல் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ஜூன் 6 முதல் 26 வரையில் 219 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது நான்காம் கட்டமாக மதுரை மத்திய சிறைச்சாலைகளில் இருந்து 30 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை சிறைத்துறை அதிகாரிகள் அறிவுரை மற்றும் வாழ்த்துக்களை வழங்கி வழியனுப்பி வைத்தனர்.. விடுதலையான கைதிகளை அவர்களது உறவினர்கள் சிறை வாசலில் இருந்து கண்ணீர் மல்க வரவேற்றனர்.

அடுத்த செய்தி