ஆப்நகரம்

10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபர் கைது!

அரக்கோணம் அடுத்த களத்தூர் பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 21 Feb 2019, 6:14 pm
அரக்கோணம் அடுத்த களத்தூர் பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil iouo


வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த களத்தூர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் (வயது 35) என்ற நபர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இச்செயல் காரணமாக சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து சந்தேகம் அடைந்த பெற்றோர் சிறுமியிடம் கேட்டு அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக இது குறித்து அரக்கோணம் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் பாஸ்கரன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இத்தகவலை அறிந்த செய்தியாளர்கள் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் விசாரித்தபோது அதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறவில்லையென கூறி மூடி மறைக்க முயற்சி மேற்க்கொண்டனர். செய்தி வெளியிடாமல் இருக்க பணம் கைமாறியதா?என பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பு புலம்பி வருகின்றனர்.

அடுத்த செய்தி