ஆப்நகரம்

எக்ஸ்பிரஸ் ரயில்களாகும் பேசஞ்சர் ரயில்கள்: பின்னால் உள்ள ஆபத்து என்ன?

தெற்கு ரயில்வேயில் 36 பயணிகள் ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்படவுள்ளன.

Samayam Tamil 22 Oct 2020, 8:59 am
கொரோனா பொது முடக்கம் காரணமாக சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில் எப்போது அனைத்து ரயில்களும் இயங்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil southern railway


ஆனால் எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. நாடுமுழுவதும் 200க்கும் மேற்பட்ட மெயில்கள், பயணிகள் ரயில்கள் விரைவு ரயில்களாக மாற்றி ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதில் நாட்டிலேயே அதிக பயணிகள் ரயில்களை மாற்றும் மண்டலங்களில் முதல் மூன்று இடத்தில் உள்ளது தெற்கு ரயில்வே.

தெற்கு ரயில்வேயில் மட்டும் 36 பயணிகள் ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்படவுள்ளன. இந்த ரயில்களில் மாநிலத்திற்குள் 24 சேவைகள் உள்ளன.

கொரோனா குறையுது, டெங்கு கூடுது: தமிழக மக்களுக்கு அதிர்ச்சி செய்தி!

அரக்கோணம்-சேலம், புதுச்சேரி-திருப்பதி, விழுப்புபுரம்-திருப்பதி, திருச்சி-ராமேஸ்வரம், ஈரோடு-திருநெல்வேலி, மதுரை-விழுப்புரம், மயிலாடுதுரை-திண்டுக்கல், நாகர்கோயில்-கோயம்புத்தூர், கோயம்புத்தூர்-நாகர்கோயில் பயணிகள் ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்படுகின்றன்.

எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்படுவதால் 30 முதல் 60 நிமிடங்கள் பயண நேரம் குறையும். ஆனால் சிறிய ரயில் நிலையங்கள் பலவற்றில் ரயில்கள் நிற்காது. இதனால் பயணிகள் பேருந்துகளை நாட வேண்டி வரும். மேலும் பயணிகள் ரயில்களில் குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாய், எக்ஸ்பிரஸ் ரயில்களில் குறைந்தபட்ச கட்டணம் 30 ரூபாயாக உள்ளது.

கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர் மரணம்: அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

பயணச் செலவு அதிகரிப்பதுடன் சிறு நகரில் உள்ள மக்கள் இந்த சேவையிலிருந்து புறக்கணிக்கப்படும் அபாயம் உள்ளது.

அகற்ற வேண்டிய நிறுத்தங்கள் குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி