ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 36 மாணவர்கள் விடுவிப்பு - முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 36 மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்ப பெறப்படும் என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

TNN 31 Jan 2017, 11:41 am
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 36 மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்ப பெறப்படும் என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
Samayam Tamil 36 students were arrested in the fight jallikattu lifts cm o panneerselvam
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 36 மாணவர்கள் விடுவிப்பு - முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்


ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான மாணவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். அவர்களை விடுவிக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் விதிஎண் 110-ன் கீழ் அறிக்கை வாசித்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட 36 மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்ப பெறப்படும் என அறிவித்துள்ளார். இந்த வன்முறை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், வன்முறையின் போது தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

அடுத்த செய்தி