ஆப்நகரம்

481 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்கள் 38,613!!

தமிழகத்தில் இன்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் ரேங்க் முறை மாற்றப்பட்டு ஏபிசி கிரேடு முறை பின்பற்றப்படுகிறது.

TOI Contributor 19 May 2017, 10:47 am
தமிழகத்தில் இன்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் ரேங்க் முறை மாற்றப்பட்டு ஏபிசி கிரேடு முறை பின்பற்றப்படுகிறது.
Samayam Tamil 38613 students have scored more than 481 marks
481 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்கள் 38,613!!


இந்த வகையில் 481 மதிப்பெண்களுக்கு அதிகமாக எடுத்த மாணவர்கள் 38,613 பேராகவும், 45 முதல் 480 வரை எடுத்த மாணவர்கள் 1,22,757 பேராகவும், 426 முதல் 450 வரை எடுத்த மாணவர்கள் 1,13,831 பேராகவும், 401 முதல் 425 வரை எடுத்த மாணவர்கள் 1,11,266 பேராகவும், 301 முதல் 400 வரை எடுத்த மாணவர்கள் 3,66948 பேராகவும் உள்ளனர்.

கடந்த முறை மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு ரேங்க் முறை இருந்தது. இந்த ஆண்டு முதல் இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, ஏ, பி, சி என்று மதிப்பெண்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்டு இருப்பதாக கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 8ம் தேதி தொடங்கி 31ம் தேதி முடிந்தது. தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 383 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 95 ஆயிரத்து 784 பேர் மாணவியர்.

38,613 students have scored more than 481 marks!!

அடுத்த செய்தி