ஆப்நகரம்

பாம்பனில் 3 ஆம் எண் புயல் கூண்டு... பெரும்புயல் உருவாகுமா?

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 29 Oct 2019, 9:21 pm
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil 3rd phase cyclone symbol hoisted in pamban harbor
பாம்பனில் 3 ஆம் எண் புயல் கூண்டு... பெரும்புயல் உருவாகுமா?


பாம்பன் அருகே 3 ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் நிச்சயமாக உருவாகும் என்பதைக் குறிக்கும் விதமான வானிலைச் சூழல் நிலவுகிறது என்பதையே இது குறிக்கும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதலா?

தற்போது கன்னியாகுமரிக் கடல் மற்றும் லட்சத் தீவு கரையோரப் பகுதிகளில் தாழ்வுப் பகுதி நீடிக்கிறது இது மேலும் மேலும் மேற்கிலிருந்து வடமேற்கு நோக்கி நகர்ந்து அரபிக்கடலுக்கு சென்று புயல் சின்னமாக (MAHA) வலுப்பெற வாய்ப்பிருக்கிறது.

அதன்பிறகு பிறகு ஏமன் பகுதியை நோக்கி சென்று விடும். இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு நேரடியான பாதிப்புகள் ஏதும் கிடையாது.

ஆழ்துளைக் கிணற்றை கடமைக்கு மூடிய அதிகாரிகள்.. கடுப்பான மக்கள்

இந்த புயல் வங்கக்கடல் பகுதியில் உள்ள ஈரப்பதமான காற்றை வடக்கு கடலோர பகுதிகள், தென்தமிழகம் ,டெல்டா பகுதிகள், வடதமிழகம் ,வடஉள்தமிழகம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் நல்ல கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது

தற்போது மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகளாக புதுச்சேரி,காஞ்சிபுரம்,திருவண்ணாமலை, கடலூர், வேலூர், சிதம்பரம், விழுப்புரம், திண்டிவனம், திருவள்ளூர், செங்கல்பட்டு,மரக்காணம், மகாபலிபுரம், ஆம்பூர், கிரிஷ்ணகிரி, காரைக்கால் மற்றும் நாகை பகுதியில் தற்போது மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது

மேலும் இந்த பகுதிகளில் மிதமான மழை தொடர்ச்சியாக பொழிவு காணப்படும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

அடுத்த செய்தி