ஆப்நகரம்

திருப்பூரில் 4 துப்புறவு பணியாளர்கள் பலி

கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்புர் ஆடை தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்றின் துணி அலசும் பகுதியை சுத்தம் செய்து கொண்டு இருந்த தொழிலாளிகள் 4 பேர் சுவாசக்காற்று குறைபாடு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Samayam Tamil 15 Apr 2019, 10:19 am
கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்புர் ஆடை தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்றின் துணி அலசும் பகுதியை சுத்தம் செய்து கொண்டு இருந்த தொழிலாளிகள் 4 பேர் சுவாசக்காற்று குறைபாடு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
Samayam Tamil dead body


தில்வார் ஹைவுஸைன் (22), ஃபரூக் அகமது (21), அன்வர் ஹவுசைன் (23), அபு (20) ஆகிய நால்வர் ஜெயகுமார் என்பவரது தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டு இருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. திருப்பூரின் கருப்பங்கவுண்டம்பாளையம் பகுதியில் இத்தொழிற்சாலை அமைந்துள்ளது.

ஆடைகளை அலசும் 20 ஆடி ஆழம் கொண்ட கழிவு நீர் சேகரிக்கும் டாங்க் அங்கு உள்ளது.
இந்த டாங்க் கடந்த 5 ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படவில்லை. முதலில் ஒருவர் இந்த டாங்குக்குள் இறங்க, அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மற்றவர்கள் அவரைக் காப்பாற்ற முற்பட்டனர்.

மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தில்வார் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தொழிற்சாலை உரிமையாளர்மீது வழக்குப்பதிவு செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி