ஆப்நகரம்

ஹோலி கொண்டாட்டத்தின்போது நீரில் மூழ்கிய சிறுவனை காப்பாற்றிய பத்திரிக்கை நிருபர்!

சென்னையில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது, 4 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பத்திரிக்கை நிருபரின் முதலுதவியால் ஒரு சிறுவன் உயிர்பிழைத்துள்ளார் .

Samayam Tamil 22 Mar 2019, 6:59 pm
சென்னையில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது, 4 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பத்திரிக்கை நிருபரின் முதலுதவியால் ஒரு சிறுவன் உயிர்பிழைத்துள்ளார்
Samayam Tamil 201903211638537756_1_Athi-0019._L_styvpf


வேப்பேரியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் நேற்று ஹோலிப்பண்டிகை கொண்டாடப்பட்டது. கட்டத்தில் உள்ள பெரிய அரங்கில் கலர் தண்ணீர் கொண்ட செயற்கையான குளம் மற்றும் வண்ணவிளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது. சிறுவர்கள் பெண்கள் என்று 2000-க்கும் மேற்பட்டவர்கள் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். கொண்டாட்டங்கள் தொடங்கிய சில நிமிடங்களிலே, அதாவது நேற்று காலை 10.50 மணிக்கு தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்த 4 சிறுவர்கள் சட்டென்று மயங்கி விழுந்தனர்.

இதை கவனித்த மற்றவர்கள் உடனடியாக மின்சார சேவையை துண்டித்தனர். இதைத்தொடர்ந்து 4 சிறுவர்களில் மூவர் சுயநினைவிற்கு வந்தனர். ஆனால் நமன் என்ற சிறுவன் மயக்க நிலையிலே இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த பத்திரிக்கை நிருபர் ரவிகுமார் நமனுக்கு உடனடியாக முதலுதவி செய்தார். இதனைத்தொடர்ந்து நமன்னுக்கு நினைவு திரும்பியதும் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

உடனடியாக செயல்பட்டு சிறுவனை காப்பாற்றிய பத்திரிக்கை நிருபரை அனைவரும் பாராட்டினர். இதனைத்தொடர்ந்து ’டைம்ஸ் ஆப் இந்தியா’ சார்பில் மாணவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்று கேட்டபோது, சிகிச்சை குறித்து விவரங்களை வழங்க மருத்துவமனை மறுத்துவிட்டது. மேலும் மின்சாரம் தாக்கியதால் சிறுவர்கள் மயக்கம் அடையவில்லை என்று விழாவை ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த வேப்பேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி