ஆப்நகரம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 4 ஆயுள் தண்டனை

தஞ்சை மாவட்டத்தில் மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 4 ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 24 Apr 2018, 4:18 pm

தஞ்சை மாவட்டத்தில் மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 4 ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil Justice


தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சிவகொள்ளை பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியம், தனது மனவளா்ச்சிக் குன்றிய மகளுக்கு தொடா்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்துள்ளாா். தந்தையின் பாலியல் தொல்லையால் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்த நிலையில் தந்தை சுப்பிரமணியம் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டாா். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த தஞ்சை மகளிா் நீதிமன்றம், மனநலம் பாதிக்கப்பட்ட மகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த தந்தைக்கு 4 ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவா் சாகும் வரை தண்டனை அனுபவிக்கும் படி தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி