ஆப்நகரம்

கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை அடித்த வழக்கு : 4 இளைஞர்களுக்கு 7 ஆண்டு சிறை!

கோவை: கோவையில் நிதி நிறுவன அதிபரை கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை அடித்த வழக்கில் 4 இளைஞர்களுக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Jan 2019, 7:29 pm
கோவை: கோவையில் நிதி நிறுவன அதிபரை கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை அடித்த வழக்கில் 4 இளைஞர்களுக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Coimbatore Court


கோவையில் கவுண்டம்பாளையம் பகுதியில் காந்தி என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அவரது வீட்டுக்குள் புகுந்த சில மர்ம நபர்கள் காந்தியின் மனைவி வசந்தியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 3,30,000 மதிப்பிலான 22 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த வழக்கின் குற்றவாளிகள், கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த அசோக், நாகராஜ், கோவை பன்னிமடையைச் சேர்ந்த சந்தீப், சின்னதடாகத்தை சேர்ந்த மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது, சாலையில் சென்று கொண்டிருந்த சதாதேவன் என்ற முதியவரை மிரட்டி ரூ. 2,000 வழிப்பறி செய்த வழக்கும் பாய்ந்தது.
இந்த நிலையில், இந்த இரண்டு வழக்கிற்கான தண்டனையை கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் வழங்கியது. அதில், பாலக்காட்டை சேர்ந்த அசோக், நாகராஜ் மற்றும் பன்னிமடையைச் சேர்ந்த சந்தீப், சின்னதடாகத்தை சேர்ந்த மணி ஆகிய நால்வருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அடுத்த செய்தி