ஆப்நகரம்

4 மாணவிகள் தற்கொலை : ஆசிரியர்கள் பணிநீக்கம் !

அரக்கோணம் அருகே கிணற்றில் குத்து 4 மாணவிகள் தற்கொலை செய்துகொண்டதை தொடதைத் தொடர்ந்து அதற்கு காரணமாக இருந்த இரண்டு ஆசிரியர்களை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

Samayam Tamil 25 Nov 2017, 4:42 pm
அரக்கோணம் அருகே கிணற்றில் குத்து 4 மாணவிகள் தற்கொலை செய்துகொண்டதை தொடதைத் தொடர்ந்து அதற்கு காரணமாக இருந்த இரண்டு ஆசிரியர்களை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
Samayam Tamil 4 students suicide in arakkonam and the teachers were send out of job
4 மாணவிகள் தற்கொலை : ஆசிரியர்கள் பணிநீக்கம் !


.வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே பனப்பாக்கத்தைச் சேர்ந்த ரேவதி , சங்கரி , தீபா , மனீஷா ஆகிய 4 பேர் அங்குள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தனர். ஒரே வகுப்பில் படித்து வந்த இவர்கள் 4 பேரும் சரியாகப் படிக்கவில்லை என புகார் கூறப்பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை மாணவிகள் 4 பேரும் வழக்கம் போல் சைக்கிளில் பள்ளிக்கு வந்துள்ளனர். காலையில் வகுப்பில் அமர்ந்து பாடங்களை பயின்றதாகத் தெரிகிறது. பிற்பகலில் இந்த 4 மாணவிகளும் திடீரென பள்ளியில் இருந்து காணாமல் போய்விட்டனர்.

குழந்தைகளை காணவில்லை என்று பெற்றோர்கள் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது . அந்த மாணவிகள் படித்த பள்ளியின் இரு ஆசிரியர்கள் திட்டியதுதான் காரணம் என்று கூறப்பட்டது.

இதத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த மரணங்களுக்கு காரணமாக கூறப்படும் அந்த இரண்டு ஆசிரியர்களை பள்ளி நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியுள்ளது.

அடுத்த செய்தி