ஆப்நகரம்

மாமல்லபுரம் நகருக்குள் 4 சக்கர வாகனங்களுக்கு தடை!!

மாமல்லபுரம் நகருக்குள் இன்று முதல் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Oct 2019, 5:21 pm
மாமல்லபுரத்தில் வரும் 11, 12 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி, சீனப் பிரதமர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடக்கிறது. இதை முன்னிட்டு நான்கு சக்கர வாகனங்களுக்கு மாமல்லபுரத்தில் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
Samayam Tamil mamallapuram


மாமல்லபுரத்திற்குள் இன்று (அக்டோபர் 9) முதல் 4 சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளுக்கும் இந்த தடை பொருந்தும். தற்காலிகமாக மாமல்லபுரம் பேருந்து நிலையம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பூஞ்சேரி என்ற இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

பூஞ்சேரியில் அனைத்து அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டு, பயணிகள் இறக்கி விடப்படுகின்றனர். மாமல்லபுரம் நுழைவாயிலிருந்து இன்று முதல் மக்கள் நடந்தே மாமல்லபுரம் நகருக்குள் செல்கின்றனர். ஏற்கனவே சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கார், ஷேர் ஆட்டோக்கள் ஆகியவையும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. சென்னை நகருக்குள் வரும் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மெதுவாக வந்து சேருகின்றன.

ஜி ஜின்பிங் வருகை: 22 கிராமங்களுக்கு மீன் பிடிக்கத் தடை.! தமிழக அரசு உத்தரவு..

பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் மாமல்லபுரம் துறைமுக நகரமாக விளங்கியது. சீனர்களும் இந்த கடல் மார்க்கத்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டு இருந்தனர். ஏற்கனவே இந்தியாவுக்கும், சீனாவுக்கும் வர்த்தக உறவு இருந்து இருப்பது சமீபத்தில் சீனாவில் கண்டறியப்பட்ட கல்வெட்டுக்கள் மூலம் தெரிய வந்திருந்தது.

மாமல்லபுரம் சந்திப்பு இருக்கட்டும்.. பஞ்ச சீலக்கொள்கைகளை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்:இந்தியாவுக்கான சீன தூதர்

இந்த நிலையில், மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து இருநாட்டு வர்த்தக உறவுகள் குறித்துப் பேசுகின்றனர். வரும் 11, 12ஆகிய இரண்டு நாட்களும் மாமல்லபுரத்தில் இருக்கும் ஐடிசிக்கு சொந்தமான ஐந்து நட்சத்திர ஓட்டலில் இருநாட்டு தலைவர்களும் தங்குகின்றனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி