ஆப்நகரம்

கோயம்புத்தூரில் அனுமதி பெறாமல் இயங்கி வந்த 40 பைக் டாக்ஸிகள் பறிமுதல்

கோவையில் முறையின்றி இயங்கி வந்த 40 பைக் டாக்ஸிகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Samayam Tamil 26 Feb 2019, 10:22 pm
கோயம்புத்தூரில் முறையாக உரிமம் பெறாமல் இயங்கி வந்த 40 பைக் டாக்ஸிக்களை வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த பைக்குகள் முன்னணி வாடகை கார் நிறுவனத்திற்கு சொந்தமானது என விசாரணையில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil கோவையில்  40 பைக் டாக்ஸிகள் பறிமுதல்


கைப்பற்றப்பட்ட இந்த பைக்குகள் அனைத்து முறையாக உரிமம் பெறாமல் வாடகைக்காக சுற்றுலாவுக்கு எடுத்துச் செல்லும் டூ-வீலராக செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதே வாகனங்கள் வாடகைக்கு எடுத்துச் செல்லும் பைக்குகளாகவும் செயல்பட்டு வந்துள்ளது.

இதுகுறித்து பேசிய வட்டார போக்குவரத்து இணை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, இருசக்கர வாகனங்கள் டாக்ஸிகளாக இயங்க அனுமதி கிடையாது. ஆனால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் உரிய உரிமம் பெறாமல் டாக்ஸி பைக்குகளாக இயங்கி வந்துள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், கைப்பற்றப்பட்ட வாகனங்களுக்கு தரச்சான்றிதழ் மற்றும் காப்பீட்டு ப்ரீமியம் போன்ற எந்த ஆவணங்களும் இல்லை. ஒருவேளை இவை விபத்தில் சிக்கிக்கொண்டால் அதை மீட்க வழியில்லை என்று கூறினார். தவிர டாக்ஸி பைக்குகளை ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியவேண்டும் என்பதை நிறுவனங்கள் வலியுறுத்துவதும் கிடையாது என்று கூறினார்.

ஆட்டோ ஓட்டுநர்கள் மூலம் கிடைத்த தகவலை வைத்து முறையின்றி இயங்கி வந்த பைக் டாக்ஸிகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின், அபராதத் தொகையை செலுத்திவிட்டு உரிமையாளர்கள் வாகனங்களை மீட்டுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி