ஆப்நகரம்

திருப்பூரில் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளை!

திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 1 Feb 2019, 6:36 pm
திருப்பூர் : திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil திருப்பூர் கொள்ளை


திருப்பூரின் பொன்னம்மாள் நகர் பகுதியில் நட்ராஜ் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நட்ராஜ் தனது குடும்பத்தாருடன், கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூருக்கு சென்றுள்ளார்.

இவர் நேற்று திரும்பி வந்து பார்த்த போது வீடு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்ற பார்த்த போது அவர் வீட்டில் இருந்த 40 சவரன் நகை, மற்றும் ரூ. 70,000 பணத்தை காணவில்லை.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி