ஆப்நகரம்

இன்று மட்டும் 68 பேரை பலி கொண்ட கொரோனா!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று ஒரே நாளில் மட்டும் 68 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதரத்துறை தெரிவித்துள்ளது

Samayam Tamil 12 Jul 2020, 6:55 pm
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் வருகிற 31ஆம் தேதி நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடய தளர்வுகளுடன் பொது முடக்கத்தை தமிழக அரசும் நீட்டித்துள்ளது. இருப்பினும், நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்னிக்கை அதிகரித்து வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு விவரங்கள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


அந்த வகையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 4,244 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், 4,210 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். எஞ்சியவர்கள் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 1,34,226லிருந்து 1,38,470 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை தமிழகத்தில் 1,966 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று மட்டும் 3,617 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 89,532 ஆக உயர்ந்துள்ளது.

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி: உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்த போலீசார்

அரசு பரிசோதனை மையங்கள், தனியார் பரிசோதனை மையங்கள் என மொத்தம் 105 ஆய்வகங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை 16,09,448 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 42,531 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு


கொரோனா பாதிப்பு


சென்னையை பொறுத்தவரை இன்று மட்டும் 1,168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 76,148 லிருந்து 77,338 ஆக அதிகரித்துள்ளது.

அடுத்த செய்தி