ஆப்நகரம்

அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 4,25,000 வீடுகள்: முதல்வர் பழனிசாமி

அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 4,25,000 வீடுகள் கட்டப்பட்டு வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 15 Aug 2018, 12:33 pm
அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 4,25,000 வீடுகள் கட்டப்பட்டு வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil edapadi-palanasami455-15-1494841933


72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், விழாவில் அவர் பேசியதாவது:

'அங்கீகாரம் அற்ற மனைப் பிரிவுகளில் மனைகளை வாங்கிய ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கட்டட, மனை விற்பனை (முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்) சட்டம், 2016ஐ தமிழ்நாடு அரசு முனைப்பாக செயல்படுத்துகிறது. குடிசைகளற்ற தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க இந்த அரசு தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இதன் அடிப்படையில், இந்த ஆண்டு, பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்தின் கீழ், 2,276 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1 லட்சத்து 30 ஆயிரம் வீடுகளும், முதலமைச்சரின் சூரிய ஒளி மின்வசதி கொண்ட பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 420 கோடி ரூபாய் செலவில் 20,000 வீடுகளும் கட்டப்படும் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘அனைவருக்கும் வீட்டுவசதி’ என்ற பிரதம மந்திரி வீட்டுவசதி 12 திட்டத்தின் கீழ் நகர்புறங்களில் 16 ஆயிரத்து 776 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 லட்சத்து 25 ஆயிரம் குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நடப்பு ஆண்டில் இந்த திட்டத்திற்காக இந்த அரசு 2 ஆயிரத்து 301 கோடியே 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு, இந்த ஆண்டு முதல் ஊரக உள்ளாட்சிகளுக்கு வழங்கும் பகிர்வு நிதியில் ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் தனியாக ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.'

இவ்வாறு முதல்வர் பேசினார்.

அடுத்த செய்தி