ஆப்நகரம்

கொரோனா காலத்தில் அகற்றப்பட்ட மருத்துவ கழிவுகள் எவ்வளவு தெரியுமா?

கொரோனா காலத்தில் இதுவரை எத்தனை டன்கள் மருத்துவ கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன என்பது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

Samayam Tamil 23 Jun 2020, 8:18 pm
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி, மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட சுயப் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE Kit), முகக்கவசங்கள், கையுறைகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள், கொரோனா பரிசோதனைக்குப் பயன்படுத்திய ஆர்.டி.பி.சி.ஆர். கிட் (rtPCR Kit ) உள்ளிட்டவை மருத்துவக் கழிவுகளாக (Medical Waste) மாறியுள்ளன.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


நோய்த் தொற்று அபாயம் உள்ள இந்த மருத்துவக் கழிவுகளை, முறையாக மூடப்பட்ட குப்பை வண்டிகளில் எடுத்துச் சென்று, பாதுகாப்பாகவும் - உரிய முறையிலும் ‘Incinerator’ கொண்டு எரிக்க வேண்டும். இவற்றைக் கண்காணித்து, உரிய முன்னெச்சரிக்கை முறைகளைக் கையாண்டு, அப்புறப்படுத்தி, அவற்றை அழித்து, நோய்த் தொற்று பரவாமல் தடுக்க வேண்டிய முக்கியமான பணி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உரியதாகும்.

இந்த நிலையில், கொரோனா காலத்தில் அகற்றப்பட்ட மருத்துவ கழிவுகள் குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, இதுவரை 490 டன் மருத்துவக் கழிவுகள் முறையாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிலென்மார்க், சிப்லா பங்குகளை நம்பி வாங்கலாமா?

முன்னதாக, இதுகுறித்து கேள்வி எழுப்பிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா மருத்துவக் கழிவுகளை அகற்றுவது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என தெரிவித்ததுடன், எவ்வளவு மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டு, அறிவியல் ரீதியாக அழிக்கப்பட்டன என்பதைத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

மூடப்படாத குப்பை வண்டிகளில் கழிவுகளை அப்படியே அள்ளிப்போட்டு, சென்னையைச் சுற்றியுள்ள வழக்கமான குப்பை கொட்டும் இடங்களில் (Dumping Yard) குழிதோண்டிப் புதைக்கும் ஆபத்தான செயல் நடைபெறுகிறது எனவும் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி