ஆப்நகரம்

எந்த தோல்வியும் எங்களை துவளச் செய்யாது: தமிழிசை!

5 மாநிலத் தேர்தல் முடிவில் பாஜகவிற்கு ஏற்பட்ட தோல்வி எந்த விதத்திலும் தங்களை துவளச் செய்யாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Dec 2018, 11:41 am
5 மாநிலத் தேர்தல் முடிவில் பாஜகவிற்கு ஏற்பட்ட தோல்வி எந்த விதத்திலும் தங்களை துவளச் செய்யாது என்று தமிழக பாஜக தலைவர்தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil k


5 மாநிலத் தேர்தல் முடிவுகள் இன்றுவெளியாகும் சூழலில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சிமுன்னிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில்இன்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

5 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் அது பாஜகவிற்கு தோல்வியாக இருக்காது. பாஜக வெற்றி பெற்றால் இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினார்கள். இப்போது அவர்கள் வெற்றியடைந்துள்ளனர் அதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் 5 மாநில மக்களும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என்றும் கூறினாலும்பிரதமராக மோடிதான் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். எனவே மோடி அலை என்றுமே ஓயாது. எந்த ஆளுமையாலும் மோடியின் அலையை தடுக்க முடியாது.இது தோல்வி அல்ல 2019 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் பிரதமர் தேர்தலின் வெற்றிக்கான ஆரம்பம். பாஜகவுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள கூட்டணி வெற்றி பெறாது’’

இவ்வாறுஅவர்கூறினார்.

அடுத்த செய்தி