ஆப்நகரம்

கமல் ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த ஏராளமான மீனவர்கள்!

மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஏராளமான மீனவர்கள் இணைந்தனர்.

Samayam Tamil 16 Mar 2018, 5:12 pm
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஏராளமான மீனவர்கள் இணைந்தனர்.
Samayam Tamil 50 fishermen joined makkal needhi maiam party today in chennai
கமல் ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த ஏராளமான மீனவர்கள்!


நடிகர் கமல் ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார்.

இக்கட்சியின் கொள்கை திராவிடமும், தேசியமும் இணைந்த ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உறுப்பினர் சேர்க்கை இணையம் வழியாகவும், உறுப்பினர் படிவம் வாயிலாகவும் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் தீவிர அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சமீபத்தில் தமிழக பட்ஜெட் குறித்து, தனது விமர்சனக் கருத்துகளை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் 50க்கும் மேற்பட்ட மீனவர்கள், கமல் ஹாசனை நேரில் சந்தித்து உரையாடினர்.

பின்னர் அவருடைய மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர்.

A group of 50 fishermen from Chennai met Nammavar Kamal Haasan and joined Makkal Needhi Maiam party today.

அடுத்த செய்தி