ஆப்நகரம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மழை... 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்த கனமழையால் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

Samayam Tamil 1 May 2020, 9:55 am
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் பெய்த இடியுடன் கூடிய கன மழையில் 50 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் சம்பவ இடத்திற்கு மாவட்ட உதவி ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
Samayam Tamil கோப்புப்படம்


கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் வெப்பச் சலனம் காரணமாக தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், 2 மணி நேரத்துக்கு மேலாக பெரும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.இந்த கனமழையால் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார பகுதிகளான ஆத்துக்கடை தெரு, நந்தவனப்பட்டி தெரு , குலாலர் தெரு, ஓட்டமடம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருக்கும் சமயத்தில், இதுபோன்ற சம்பவங்கள் மென்மேலும் சிரமத்தை அதிகரிக்கும். இந்நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆட்சியர் தினேஷ்குமார், மழை நீரை வெளியேற்ற ஆவண செய்யும்படி வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டார்.

வருவாய்த்துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட்டு அப்பகுதியில் இருந்த மழை நீரை வெளியேற்றினர்.

அடுத்த செய்தி