ஆப்நகரம்

மரியாதை இல்லாததால் திமுகவிற்கு தாவிய 500 ரஜினி ரசிகர்கள்!

ரஜினி மக்கள் மன்றத்தில் சரியான மரியாதையில்லை எனக் கூறி 500க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் திமுகவில் இணைந்துள்ளனர்.

Samayam Tamil 9 Feb 2019, 12:12 pm
ரஜினி மக்கள் மன்றத்தில் சரியான மரியாதையில்லை எனக் கூறி 500க்கும் மேற்பட்டரஜினி ரசிகர்கள் திமுகவில் இணைந்துள்ளனர்.
Samayam Tamil rajinikanth-new-tv-channel-2-750x506


நடிகர் ரஜினி, அரசியலுக்கு வருவதாக சென்ற ஆண்டு அறிவித்தார். இதைத்தொடர்ந்து ரஜினிமக்கள் மன்ற தொடக்கபட்டு, அதில் திரளான ரஜினி ரசிகர்கள் உறுப்பினர்களாக இணைந்தனர். இதைத்தொடர்ந்து ரஜினி ரசிகர் மன்ற உறுப்பினர்கள் சிலர் நீக்கப்பட்டனர். இதன்பெயரில் ரஜினி கராராக அறிக்கை வெளிட்டார்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம்ரஜினி ரசிர்கள் 500 பேர், சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினைநேரில் சந்தித்து திமுகவில் இணைந்தனர். இதைத்தொடர்ந்துசெய்தியாளர்களை சந்தித்தஅவர்கள் ,ரஜினி மக்கள்மன்றத்தில் தங்களுக்குஉரிய மரியாதை வழங்கப்படவில்லை என்றும் அவமதிக்கப்படுவதாகவும் கூறினர்.

மேலும், மக்களுக்கு மகத்தான வழியில் செயலாற்றிவரும் தலைவர்களில் திமுக தலைவர் ஒருவரே இருக்கிறார் என்றும் இதனால்திமுக கட்சியில் இணைந்து இருப்பதாகவும் தெரிவித்தனர். தற்போதைய சூழலில் ரஜினி ரசிகர்கள் 500 பேர்திமுகவில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி