ஆப்நகரம்

அண்ணா பல்கலையில் கருத்தரங்கம் நிறுவுவது வீண் செலவு: ராமதாஸ்

அண்ணா பல்கலைக்கழகத்தில் 5,000 இருக்கைகள் கொண்ட மெகா கருத்தரங்க கட்டிடம் நிறுவுவது வீண் செலவு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

TNN 24 Aug 2016, 11:46 pm
அண்ணா பல்கலைக்கழகத்தில் 5,000 இருக்கைகள் கொண்ட மெகா கருத்தரங்க கட்டிடம் நிறுவுவது வீண் செலவு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 5000 seat seminar hall at anna university a wasteful expenditure ramadoss says
அண்ணா பல்கலையில் கருத்தரங்கம் நிறுவுவது வீண் செலவு: ராமதாஸ்


தமிழக சட்டப்பேரவையில், முதலமைச்சர் ஜெயலலிதா, விதி எண் 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது, என்ஜினீயரிங் கல்வியை மேம்படுத்தும் விதமாக, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.310 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக, தெரிவித்தார். இதன்படி, ஒரேநேரத்தில் 5,000 பேர் அமரக்கூடிய இருக்கை வசதிகள் கொண்ட மெகா கருத்தரங்க கட்டிடம் நிறுவப்படும் என்றும் அவர் கூறினார்.

இதற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில், இதுவரை 5,000 பேர் பங்கேற்கும் வகையில் சர்வதேச அல்லது உள்நாட்டு கருத்தரங்க நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை என, அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் 3,500 பேர் அமரக்கூடிய வசதிகொண்ட அரங்கம் உள்ளது. நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2,500 இருக்கைகள் கொண்ட ஆடிட்டோரியமும், அண்ணா லைப்ரரி கட்டிடத்தில் 1,280 இருக்கைகள் கொண்ட அரங்கமும் உள்ளன. இந்நிலையில், சென்னையில் மற்றொரு மெகா கருத்தரங்க கட்டிடம் நிறுவுவது வீண் செலவாகும்.

சென்னை பல்லைக்கழகம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் போன்றவற்றில் துணை வேந்தர் பதவியிடங்கள் காலியாக உள்ளன. இதுவரை அந்த பதவிகளை நிரப்ப, தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை. இதுபோன்ற வீண் திட்டங்களில் கவனம் செலுத்துவதை கைவிட்டு, பல்கலைக்கழக வேந்தர்களை நேர்மையான முறையில் நியமிக்க வேண்டும் என்றும், ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி