ஆப்நகரம்

சாப்பிடும் போது வந்த ஆற்று வெள்ளம்... 51 பேர் பத்திரமாக மீட்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பவானி ஆற்றங்கரையில் பத்திரகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் ஆற்றங்கரையான பவானியாற்றங்கரையில் சமைத்து உண்பது அங்கு வரும் பக்தர்களின் வழக்கம்.

Samayam Tamil 8 Oct 2019, 10:57 pm
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பவானி ஆற்றங்கரையில் பத்திரகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் ஆற்றங்கரையான பவானியாற்றங்கரையில் சமைத்து உண்பது அங்கு வரும் பக்தர்களின் வழக்கம்.
Samayam Tamil 51 rescued from bhavani river flood
சாப்பிடும் போது வந்த ஆற்று வெள்ளம்... 51 பேர் பத்திரமாக மீட்பு


இந்நிலையில், காரமடை நீரேற்று நிலையத்திற்கான பம்புஹவுஸ் பகுதியில் குளித்து கொண்டிருந்தனர். அதேபோல மறுபுறம் சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பேர் ஆற்று வெள்ளத்தில் தத்தளித்தனர்.

இதுகுறித்து உடனடியாக மீட்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த மீட்புத்துறையினர் விரைந்து செயல்பட்டு ஆற்றில் சிக்கிய அனைவரையும் மீட்டனர்.



பெரும் அசம்பாவிதம் நடக்கவிருந்த நிலையில் அதனை தடுத்து அனைவரையும் பத்திரமாக மீட்ட மீட்ப்புத்துறையினருக்கு பொதுமக்களும் பக்தர்களும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி